மும்பையில் ரூ.8 கோடி மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய சிவசேனா பிரமுகர் மீது மின்சாரம் திருடியதாக காவல் நிலையத்தில் புகார்

0 3179
மும்பையில் ரூ.8 கோடி மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய சிவசேனா பிரமுகர் மீது மின்சாரம் திருடியதாக காவல் நிலையத்தில் புகார்

மும்பையில் அண்மையில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வாங்கிய சிவசேனா பிரமுகர் சஞ்சய் கெய்க்வாட், 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மின்சாரம் திருடிய புகாரில் சிக்கியுள்ளார்.

இவர், கோக்சேவாடி பகுதியில் தமக்கு சொந்தமான கட்டிடம் கட்டும்பணியின்போது, 34 ஆயிரத்து 840 ரூபாய் மதிப்பில் மின்சாரம் திருடியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா மின்வாரியம், 15 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சேர்த்து, 3 மாதத்தில் மின் கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டது. ஆனால், பணம் கட்ட தவறியதால், கடந்த 30 ஆம் தேதி சஞ்சய் கெய்க்வாட் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் அபராதத் தொகையுடன் சேர்த்து, 49 ஆயிரத்து 840 ரூபாய் செலுத்திய சஞ்சய் கெய்க்வாட், தம் மீதான மின் திருட்டு குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments