சமாஜ்வாடி கட்சி எம்பி ஆசாம்கான், மகன் மீண்டும் சிறையில் அடைப்பு

0 2145

த்தரபிரதசத்தின் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவரும், எம்பியுமான ஆசாம்கான், அவரது மகன் அப்துல்லா கான் ஆகியோர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததை அடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிதாபுர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மே 9 ஆம் தேதி மெடன்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் பூரணமாக உடல் நலம் பெற்றதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததை அடுத்து, மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments