சென்னை எண்ணூரில் கேஸ் அனல் மின் நிலையம் விரைவில் அமைக்க திட்டம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

0 2625
சென்னை எண்ணூரில் கேஸ் அனல் மின் நிலையம் விரைவில் அமைக்க திட்டம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை எண்ணூரில் கேஸ் அனல் மின் நிலையம் விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் மின் அழுத்த குறைபாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 100 இணைப்புகள் உள்ள இடத்தில் 200 இணைப்பு கொடுத்திருப்பதால், மின்கடத்திகளை மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சோலார் பிளாண்ட் அமைத்து மின் பற்றக்குறையை  போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கான கிடங்குகள் அமைக்கப்படவுள்ளதாகவும் செந்தில்பாலாஜி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments