முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கொலை வழக்கு : மேலும் ஒருவன் கைது

0 2564
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கொலை வழக்கு : மேலும் ஒருவன் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி கொலை வழக்கில் மூன்றாவதாக ஒருவரை டெல்லிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜூலை ஏழாம் நாள் இரவு டெல்லி வசந்த் விகாரில் உள்ள கிட்டியின் வீட்டில் புகுந்த மூவர் அவரைத் தலையணையால் அமுக்கிக் கொன்றதாகப் பணிப்பெண் தெரிவித்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சலவைக்காரர் ராஜுவையும், கூட்டாளியான ராகேசையும் ஏற்கெனவே கைது செய்தனர்.

இந்நிலையில் மூன்றாவதாக சூரஜ் என்பவனை நேற்றுக் கைது செய்தனர். கிட்டியின் வீட்டில் பணம் நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் அவரைக் கொல்லச் சலவைக்காரர் ராஜு கூட்டாளிகளுடன் சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments