டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 120 பேர் பங்கேற்பு..!
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் வழங்குவதாக அரியானா அரசும், 5 கோடி ரூபாய் வழங்குவதாகக் கர்நாடகம், குஜராத் மாநிலங்களும் அறிவித்துள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் தடகள வீரர் வீராங்கனைகள் 120 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் தங்கம் வென்றால் 75 லட்ச ரூபாயும், வெள்ளி வென்றால் 50 லட்ச ரூபாயும், வெண்கலம் வென்றால் 30 லட்ச ரூபாயும் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
31 பேரைப் போட்டிக்கு அனுப்பியுள்ள அரியானா தங்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசு என அறிவித்துள்ளது. கர்நாடகம், குஜராத் மாநிலங்கள் 5 கோடி ரூபாய் வழங்குவதாகவும், டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு மாநிலங்கள் 3 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அறிவித்துள்ளன.
அதேநேரத்தில் மேற்கு வங்க மாநிலம் மிகக் குறைந்த அளவாக 25 லட்ச ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
Comments