டெல்லியில் அதிக ஒலி எழுப்பினால் ரூ.1 லட்சம் அபராதம்..!
டெல்லியில் அதிக ஒலி எழுப்பினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபாராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு, நகரில் ஒலி மாசுபாட்டை உருவாக்குவதற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை திருத்துவதாக அறிவித்துள்ளது. புதிய அபராத விகிதங்களின்படி, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தினால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
புதிய விதிகளின்படி, பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவு பகுதி, அமைதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மண்டலத்துக்குள் பட்டாசு வெடித்தால், 20 ஆயிரம் ரூபாயும், மற்ற இடங்களில் பட்டாசு வெடித்தால் 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Comments