மயிலாப்பூர் பி.எஸ். தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் மீது முன்னாள் மாணவி பாலியல் புகார்
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் பி.எஸ். என்று அழைக்கப்படும் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் மீது அங்கு பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அங்கு பயின்ற மாணவி ஒருவர், ஆசிரியர்கள் சிவக்குமார், வெங்கட்ராமன், ஞானசேகரன் ஆகிய மூவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் மூவரும் வகுப்பறையில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, புகாருக்கு ஆளான 3 ஆசிரியர்களும் எத்தனை ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றி வருகிறார்கள்? இவர்கள் மீது மாணவிகள் ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளார்களா? உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments