”விமானநிலையங்களுக்கு பெயர் வைப்பதற்கு நாடு தழுவிய கொள்கை” -மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் யோசனை

0 2500
”விமானநிலையங்களுக்கு பெயர் வைப்பதற்கு நாடு தழுவிய கொள்கை” -மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் யோசனை

விமானநிலையங்களுக்கு பெயர் சூட்டுவதில் தேசிய அளவில் கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசை மும்பை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மும்பை பெருநகர மண்டலத்திற்கு உட்பட்ட நவி மும்பையில் வரவிருக்கும் சர்வதேச விமானநிலையத்திற்கு டி.பி. பாட்டீல் பெயரைச் சூட்ட வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், விமான அமைச்சகம் புதிய அமைச்சர்களைப் பெற்றுள்ளதால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பெயர் சூட்டுவது தொடர்பான கொள்கையை வகுப்பது அவர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

தொடர்ந்து விசாரணை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments