கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் - கோவை ஆட்சியர் உத்தரவு

0 3858
கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து அங்கு கேரளா எல்லையையொட்டியுள்ள 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வருவோர் இபாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் இ-பாஸ் இருந்தும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டால் திருப்பி அனுப்பப்படுவர் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் இருந்து பஸ் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு, ரயில் பயணிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments