”ஐபிஎல் சென்னை அணியில் தோனி மேலும் 2 ஆண்டுகளுக்குத் தொடர்வார்” -சிஎஸ்கே நிர்வாகம்

0 9536
”ஐபிஎல் சென்னை அணியில் தோனி மேலும் 2 ஆண்டுகளுக்குத் தொடர்வார்” -சிஎஸ்கே நிர்வாகம்

கேந்திர சிங் தோனி ஐபிஎல் சென்னை அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்வார் என அணியின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கிய 2008ஆம் ஆண்டில் இருந்தே சென்னை அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். இடையில் சென்னை அணி தடை செய்யப்பட்டபோது புனே அணிக்குத் தலைமையேற்றார்.

மீண்டும் சென்னை அணிக்கு அனுமதி கிடைத்ததும் அதில் இணைந்துகொண்டார். இந்நிலையில் தோனி முழுத் தகுதியுடன் இருப்பதாகவும், அவரை அணியில் இருந்து விடுவிக்க வேண்டிய காரணம் ஒன்றுமில்லை என்றும் சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments