தமிழகம் முதன்மை மாநிலமாக வளர்ச்சி பெற முயற்சி மேற்கொள்வேன் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

0 3539

தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவரான டாக்டர் எல்.முருகன் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தகவல், ஒலிபரப்பு,பால்வளம்,கால்நடை மற்றும் மீன்வளம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றார்.

நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்தைச் சேர்ந்த எல்.முருகன் கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சிக்கு 4 இடங்கள் கிடைத்தன. இதையொட்டி, பாஜக எம்எல்ஏ.க்களுடன் அண்மையில் அவர் பிரதமரை சந்தித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments