தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும்-வானிலை ஆய்வு மையம்

0 16231
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்குச் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை 9 முதல் 11 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென எச்சரித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments