திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் போது கே.ஜி.எப் -இரண்டாம் பாகம் வெளியாகும் ; மறைமுகமாக சுட்டிக்காட்டும் தயாரிப்பு நிறுவனம்

0 3601
திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் போது கே.ஜி.எப் -இரண்டாம் பாகம் வெளியாகும்


திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் போது கே.ஜி.எப் -இரண்டாம் பாகம் வெளியாகும் என மறைமுகமாக சுட்டிக்காட்டும் பதிவை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. திரையரங்குகள் திறக்கப்படுவதற்காக காத்திருப்பதை மறைமுகமாக குறிக்கும் விதமாக, கேங்க்ஸ்டர்களால் அரங்குகள் நிறைந்தால் மட்டுமே அசுரன் வெளிவருவான் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments