சார்பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு.. பணியில் இல்லாத சார் பதிவாளர் மீது நடவடிக்கை என எச்சரிக்கை

0 2937

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில், பணி நேரத்தில் வெளியில் சென்ற சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்.

சார்பதிவாளர் அலுவலகத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அங்கிருந்த மற்ற அதிகாரிகளிடம் சார் பதிவாளர் செந்தூர்பாண்டியன் எங்கே என விசாரித்த போது அவர்கள் மழுப்பலாக பதில் அளித்தனர்..

அங்குள்ள சி.சி.டிவி காட்சிகளை பார்த்து, சார் பதிவாளர் செந்தூர்பாணடியன் பணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நேரத்தை அதிகாரிகள் குறித்துக்கொண்டனர். பொதுமக்களின் புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments