வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

0 3436

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய6 மாவட்டங்கள் உள்பட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளைய தினம் தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

தெற்கு வங்கக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோர பகுதிகளுக்கு 3 நாட்களுக்கும், அரபிக் கடல் பகுதிக்கு 5 நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments