புதிய ஒளிபரப்பு சட்டத்திருத்த மசோதா விவகாரம் ; முதலமைச்சரை சந்தித்து நடிகர் கார்த்தி கோரிக்கை

0 4263
முதலமைச்சரை சந்தித்து நடிகர் கார்த்தி கோரிக்கை

 

புதிய ஒளிபரப்புச் சட்டத்துக்கு எதிரான திரைத்துறையினரின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், நடிகர் கார்த்தி மனு அளித்தார்.

மத்திய அரசு கடந்த 18ஆம் தேதி வெளியிட்ட புதிய ஒளிபரப்புச் சட்டத் திருத்த மசோதா, ஒரு படத்துக்கு தணிக்கை குழு வழங்கிய சான்றை, பார்வையாளர்களின் புகாரின் பேரில் திரும்பப் பெற முடியும் என்ற அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

இது திரைத்துறையின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்த நடிகர் கார்த்தி, பின் செய்தியாளர்களை சந்தித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments