தமிழகம் போலவே நாடு முழுவதும் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை.. 30 வங்கி கணக்குகள் முடக்கம்..!

0 4008

ஹரியானாவின் மேவாட் கொள்ளையர்கள் தமிழகம் போலவே நாடு முழுவதும் எஸ்.பி.ஐ.வங்கி ஏ.டி.எம். மையங்களில் கைவரிசைக் காட்டியுள்ளதை கண்டுபிடித்துள்ள சென்னை போலீசார், கொள்ளைக்கு பயன்படுத்திய 30 ஏ.டி.எம். கார்டுகளின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.

தமிழகம் வருவதற்கு முன்பே, மஹராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் கைவரிசை காட்டிவிட்டு, விமானம் மூலம் சென்னைக்கு வந்த அவர்களை ஹரியானாவில் முகாமிட்டு சென்னை போலீசார் தான் முதலில் கைது செய்ததாகவும், சம்பந்தப்பட்ட மாநில காவல்துறை உதவி கேட்டால் உடனடியாக உதவ தயாராக இருப்பதாகவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதிலும் எத்தனை வங்கி ஏடிஎம்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது குறித்து எஸ்பிஐயிடம் தகவல் கேட்டு இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments