தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 3098

மிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜூலை மாதத்திற்கான கொரோனா தடுப்பூசிகள் மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு நாளைக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments