உத்தரகாண்ட் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

0 5909
உத்தரகாண்ட் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு


த்தரகாண்டின் 11 ஆவது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றுக் கொண்டார். டேராடூன் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புஷ்கர் சிங் தாமியுடன்,பாஜக எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். உத்தரகாண்ட் முதலமைச்சராக இருந்த தீரத் சிங் ராவத், குறிப்பிட்ட காலத்திற்குள் எம்எல்ஏ ஆக முடியாது என்ற சூழல் ஏற்பட்டதால் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து டேராடூனில் நேற்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புஷ்கர் சிங் தாமி சட்டமன்றகட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments