வழக்கு விசாரணை மற்றும் பொது வெளியில் சக்கர நாற்காலியில் சுற்றி வரும் எம்பி பிரக்யாசிங் தாக்கூர் கூடைப்பந்து விளையாடும் வீடியோ வெளியானது

0 3257
வழக்கு விசாரணை மற்றும் பொது வெளியில் சக்கர நாற்காலியில் சுற்றி வரும் எம்பி பிரக்யாசிங் தாக்கூர் கூடைப்பந்து விளையாடும் வீடியோ வெளியானது

ழக்கு விசாரணை மற்றும் பொது வெளியில் சக்கர நாற்காலியில் சுற்றி வரும் எம்பி பிரக்யாசிங் தாக்கூர் கூடைப்பந்து விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

மத்தியப்பிரதேச போபால் தொகுதி எம்பி பிரக்யாசிங் தாக்கூர் 2008ம் ஆண்டு நடந்த மாலேகான் மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது தனது சக்கர நாற்காலியில் வந்த அவர், உடல் நலத்தைக் காரணம் காட்டிதன்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்று கூறி விசாரணைக்கு என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குப் பெற்றார். மேலும் பொது வெளியில் வரும் போதும் சக்கர நாற்காலியில் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் போபால் அருகில் உள்ள சாகேத் என்ற இடத்தில் சில வீரர்களுடன் உற்சாகமாக கூடைப்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments