கருப்புப் பூஞ்சை நோய்க்கு கூடுதலாக 1.14 லட்சம் குப்பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தகவல்

0 2791

ருப்பு பூஞ்சைக்குப் பயன்படும் மருந்தை மேலும் அதிகப்படுத்தி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் கருப்பு பூஞ்சை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் லிப்போசோமால் அம்போடெரிசின் பி என்ற மருந்து கூடுதலாக ஒரு லட்சத்து 14 ஆயிரம் குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு போதுமான அளவில் மருந்துகள் கிடைப்பதற்காக சுமார் 11 லட்சம் குப்பிகள் இது வரை நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments