அரசு விதிகளை ஏற்று அறிக்கை தாக்கல் செய்த சமூக ஊடகங்கள் ; கூகுள், ஃபேஸ்புக்&இன்ஸ்டாகிராமுக்கு மத்திய ஐடி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராட்டு

0 3176
அரசு விதிகளை ஏற்று அறிக்கை தாக்கல் செய்த சமூக ஊடகங்கள்


அவமரியாதையான பதிவுகளை தாமாக முன்வந்து நீக்கி அது குறித்த முதலாவது அறிக்கையை பிரசுரித்துள்ள கூகுள், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராட்டி உள்ளார்.

இதை சமூக ஊடகங்களில் வெளிப்படைத் தன்மை ஏற்படுவதற்கான பெரிய துவக்கமாக பார்ப்பதாக டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய டிஜிட்டல் விதிகளின் படி 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள சமூக ஊடகங்கள், தங்களது உள்ளடக்கங்கள் குறித்த புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பான அறிக்கையை மாதந்தோறும் பிரசுரிப்பது கட்டாயமாகும்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments