குழந்தை விற்பனை விவகாரத்தில் சிக்கிய "இதயம்" அறக்கட்டளை ; அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமாரும் உதவியாளரும் கைது

0 4414
குழந்தை விற்பனை விவகாரத்தில் சிக்கிய "இதயம்" அறக்கட்டளை

குழந்தை விற்பனை விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மதுரை இதயம் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமாரும் அவனுடைய உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, சட்டவிரோத குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இதயம் அறக்கட்டளை, ஆதரவற்றோர் இல்லம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதயம் அறக்கட்டளை மூலம் விற்பனை செய்யப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வரும் நிலையில், அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.

தலைமறைவாக இருந்த அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமாரையும் அவனுடைய உதவியாளர் மதர்ஷா என்பவனையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்டம் போடி அருகே தமிழக - கேரள எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments