பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீதான பாலியல் புகார்;வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் தயங்காமல் புகாரளிக்கவும் அழைப்பு

0 3794
வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் தயங்காமல் புகாரளிக்கவும் அழைப்பு


திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பது தெரியவந்துள்ளதாக விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு, கல்லூரி தரப்பிடம் விசாரணையை முடித்து, புகாரளித்த மாணவிகளிடம் போனில் விசாரணை மேற்கொண்டது.

இது குறித்து பேசிய விசாரணைக்குழுவைச் சேர்ந்த தமிமுன்னிசா, பால் சந்திரமோகனால் வேறு மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற விசாரணையும் நடந்து வருவதாகவும் அப்படி யாராவது இருந்தால் தயங்காமல் தங்களிடம் புகாரளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments