”நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும்” -முதலமைச்சர் அறிவுறுத்தல்

0 3345

நியாய விலைக்கடைகளில் தரமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆலோசனை கூட்டத்தில் இவ்வாறு அறிவுறுத்திய மு.க.ஸ்டாலின், குடும்ப அட்டைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

பெருந்தொற்று காலத்தில், சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத் திறனாளிகள், உள்ளிட்டடோருக்கு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கடன் வழங்க அறிவுறுத்தினார்.

நியாய விலைக்கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டுவந்து பொது விநியோக திட்டத்தை முழுமையாக கணினிமயமாக்க வேண்டும் என முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments