கன்னியாகுமரி அருகே காவல் உதவி ஆய்வாளரின் கார் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு தீவைப்பு..! பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள் இருவருக்கு போலீசார் வலைவீச்சு

0 3344
கன்னியாகுமரி அருகே காவல் உதவி ஆய்வாளரின் கார் மற்றும் இருசக்கர வாகனத்துக்கு தீவைப்பு..! பெட்ரோல் ஊற்றி எரித்த மர்ம நபர்கள் இருவருக்கு போலீசார் வலைவீச்சு

ன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ.யின் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த செலின்குமார், களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

ஒரு மாதத்திற்கு முன் இவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் மர்ம நபர்களால் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்றிரவு செலின்குமார் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், பைக்குக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments