சிவகளைப் பரம்பில் நடைபெற்று வரும் அகழாய்வில் 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு..!

0 5556

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மரபணுப் பரிசோதனை செய்வதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் குழுவினர் எடுத்துச் சென்றனர்.

திருவைகுண்டம் அருகே உள்ள சிவகளைப் பரம்பில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறைப் பேராசிரியர் குமரேசன் மற்றும் அவரது குழுவினர் சிவகளைக்கு வந்து முதுமக்கள் தாழிகளை ஆய்வாளர்கள் முன்னிலையில் திறந்து அதனுள்ளே கிடைத்த எலும்புகள், பொருட்கள், மண் ஆகியவற்றைப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments