இந்தியாவிலிருந்து சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு ஜூலை 31 வரை தடை நீடிப்பு

0 3245

கொரோனா தொற்று முடிவுக்கு வராததால் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் விமானங்கள் சேவை வரும் 31ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிசிஏ எனப்படும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேச பயணிகள் விமானங்கள் இயக்குவதற்கு ஜூன் 30 வரை விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி வரும் 31ம் தேதி வரை பயணிகள் விமானங்களின் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தக் கட்டுப்பாடு சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்குப் பொருந்தாது என்றும் டிஜிசிஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments