பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அமுல் அறிவிப்பு

0 3593
பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலக் கூட்டுறவு நிறுவனமான அமுல் பால் மற்றும் பால் பொருட்களை நாட்டின் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை முதல் அனைத்து வகைப் பாலின் விலையையும் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொட்டலமிடும் செலவு, போக்குவரத்துச் செலவு, மின்னாற்றல் எரியாற்றல் ஆகியவற்றுக்கான செலவு முப்பது விழுக்காடு அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments