ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட சிறுவன் ; மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 3462
ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட சிறுவன் ; மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தைவானில் ஜூடோ பயிற்சியாளரால் பல முறை தூக்கிவீசப்பட்டு, 2 மாதமாக கோமாவில் இருந்த 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கடந்த ஏப்ரல் மாதம் புதிதாக ஜூடோ பயிற்சிக்கு சென்ற அச்சிறுவனுக்கு ஜூடோ கற்றுத்தருவதாக கூறி, ஜூடோ அசைவுகளை ஒழுங்காக கற்றுக் கொள்ளாததால் பயிற்சியாளர் 27 முறை தரையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

இதில், நிலைகுலைந்து சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், கடுமையான தலைவலி மற்றும் வாந்தியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments