பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து எனும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது? எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

0 5124
பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து எனும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது? எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக சார்பில் மாற்றுத் திறனாளிகள் 450 பேருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி போட மையங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வருவதாகவும், இருநூறு முந்நூறு பேர்களுக்குத் தான் தடுப்பூசி போடப்படுவதாகவும் தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய படி பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments