மாடெர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி கோரும் சிப்லா;இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல்

0 3262
மாடெர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி கோரும் சிப்லா

கொரோனா வைரசை அழிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில், செல்களை செயல்பட வைக்கும் எம்ஆர்என்ஏ (mRNA) முறையில்,  மாடெர்னா மற்றும் ஃபைசர் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

கார்களில் Lamborghiniஅல்லது McLarens போல, கொரோனா தடுப்பு மருந்துகளில், எம்ஆர்என்ஏ வகை தடுப்பு மருந்துகள் உயர் ரகமாக கருதப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். செல்வ வளமிக்க வளர்ந்த நாடுகளும் மாடெர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளுக்கே முன்னுரிமை கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் சுமார் 12 கோடி பேர் மாடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதேநேரம் பெரிய அளவிலான உடல்நல பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த தடுப்பு மருந்துகள், 90 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோய் எதிர்ப்புத் திறனை வழங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம், எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கின்றன.

10 கோடி ஃபைசர் தடுப்பு மருந்துகளை இருப்பில் வைக்க ஜப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், மும்பையை தலைமையகமாகக் கொண்ட, பன்னாட்டு மருந்து கம்பெனியான சிப்லா, மாடெர்னா தடுப்பூசியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இதற்கான அனுமதி கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சிப்லா நேற்று விண்ணப்பித்ததாகவும், இன்றே ஒப்புதல் அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments