தமிழ்நாட்டில் இன்று 6,553 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

0 4757
தமிழ்நாட்டில் இன்று 6,553 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

மிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 ஆயிரத்து 804 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

ஒரே நாளில் 6 ஆயிரத்து 553 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து, வீடு திரும்பினர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 597பேரும், ஈரோட்டில் 506, திருப்பூரில் 294, சென்னையில் 291 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 90 வயது மதுரை முதியவர், 94 வயது செங்கல்பட்டு முதியவர் உள்பட 98 பேர்,
கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்து 954 பேர் கொரோனாவுக்ரு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments