தடகள பயற்சியாளர் நாகராஜன் மீது குண்டாஸ்

0 3543

தடகள வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள பயிற்சியாளர் நாகராஜனைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் தடகளப் பயிற்சி மையம் நடத்தி வந்த நாகராஜன், பயிற்சியின்போது தனக்குப் பல முறை பாலியல் தொல்லை அளித்ததாகத் தடகள வீராங்கனை ஒருவர் பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் நாகராஜனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாகராஜன் தங்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக மேலும் ஆறு வீராங்கனைகள் புகார் அளித்தனர். இது தொடர்பாகவும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், நாகராஜனைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments