வருமானவரி பான்- ஆதார் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு..!

0 3350

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஆதார் திட்டம் அரசியல் சட்டரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, வரும் 30ந்தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக 3 மாதம் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் காலஅவகாசம் வருகிற செப்டம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments