தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு என புகார்..! மீன்வளத்துறை, உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை

0 2955

னுஷ்கோடி அருகே கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தபோது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்ததாக புகார் எழுந்துள்ளது.

பாம்பன் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்துக் கப்பலில் வந்த இலங்கைக் கடற்படையினர், மூன்று படகுகள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கரை திரும்பிய மீனவர்களிடம் மீன்வளத்துறை, உளவுத்துறை அதிகாரிகள் இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூடு குறித்துக் கேட்டறிந்தனர். தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொடங்கிய பின் இலங்கைக் கடற்படையினர் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments