"கேஷ் டெபாசிட்" இயந்திரத்தில் ஜெராக்ஸ் நோட்டு: பேராசையின் முடிவில் இருவர் கைது..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இயந்திரம் மூலம் மனைவியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
அங்குள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் டெபாசிட் இயந்திரம் மூலம் செலுத்தப்பட்ட தொகையை சரிபார்க்கும் பணி நடந்துள்ளது. அதில் ரேவதி என்பவரின் கணக்கில் கடந்த 7ஆம் தேதி 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செலுத்தப்பட்டிருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் ரேவதியின் கணவர் அந்த ஜெராக்ஸ் நோட்டுகளை டெபாசிட் செய்தது தெரியவந்தது.
குறுக்கு வழியில் பணக்காரனாக எண்ணிய சரவணனிடம், ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டெபாசிட் இயந்திரத்தில் செலுத்திவிட்டு அசல் நோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம் என அவரது நண்பர் ரவிச்சந்திரன் என்பவர் யோசனை
Comments