கோவை சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளியின் உறவினர்களும் ஊழியர்களும் மோதல்

0 3772
கோவை சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளியின் உறவினர்களும் ஊழியர்களும் மோதல்

கோவை சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் நோயாளியின் உறவினர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கொரொனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பொள்ளாச்சியை சேர்ந்த நபரின் சிகிச்சை விவரம் மற்றும் பில்களை அபிராமி மருத்துவமனை நிர்வாகம் வழங்கவில்லை என்றும், அதை உறவினர்கள் கேட்டபோது ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது மருத்துவமனை மருத்துவரின் செல்போனை, உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் தூக்கிக்கொண்டு சென்றதால் ஊழியர்கள் துரத்திச் சென்று மோதலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

அபிராமி மருத்துவமனை அளித்த புகாரின் பேரில், பொள்ளாச்சியை சேர்ந்த நோயாளிகளின் உறவினர்கள் 7 பேர் மீது கொலை மிரட்டல், மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments