ஸ்டேட் வங்கி டெபாசிட் இயந்திரங்களில் நூதன கொள்ளையில் ஈடுபட்டவன் கைது

0 5988
ஸ்டேட் வங்கி டெபாசிட் இயந்திரங்களில் நூதன கொள்ளையில் ஈடுபட்டவன் கைது

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட் இயந்திரங்களில் நூதன கொள்ளையில் ஈடுபடுபட்ட வடமாநில கொள்ளையரை போலீசார் கைது செய்தனர்.

எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு பல லட்ச ரூபாயை சுருட்டிக் கொண்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மர்ம கும்பல் குறித்த கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அரியானா மாநிலத்தை சேர்ந்த அமீர் என்பவரை கைது செய்தனர்.

மேலும் விமானம் மூலம் அமீர் சென்னை கொண்டு வரப்பட்ட நிலையில் ராயலா நகர் காவல் நிலையத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலீசாரின் அடுத்தக்கட்ட விசாரணையில் நூதன திருட்டில் ஈடுபட்ட கும்பல்  குறித்து தகவல் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments