கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் புதிதாக பயிர்க் கடன் பெற எந்த தடையும் இல்லை-கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

0 3588

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் புதிதாக பயிர்க் கடன் பெற எந்த தடையும் இல்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ததற்கான ரசீதுகள் இன்னும் வழங்கப்படாததால், புதிதாக பயிர்கடன் பெற முடியாத சூழல் உள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, 16 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, 76சதவீத விவசாயிகளுக்கு அதற்கான ரசீது கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், விவசாயிகள் புதிதாக கடன் பெற எந்த தடையும் இல்லை எனவும் விளக்கமளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments