நடிகையின் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

0 3178
நடிகையின் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாக நடிகை அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2-ந் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், வழக்கில் ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார். இதனிடையே, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நண்பர் பரணி முன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையும் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments