கன்னியாகுமரி அருகே ஆம்னி கார் குளத்திற்குள் மூழ்கி விபத்து... தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழப்பு

0 3785

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் குளத்திற்குள் மூழ்கிய விபத்தில், தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு மகள் உயிருடன் மீட்கப்பட்டார்.

சிதறால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் தனது மகள்கள் ஷாமிலி, ஷாலினியுடன் ஆம்னி காரில் ஈத்தாமொழி பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுள்ளார். கார் கோணம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்து மூழ்கியது. விபத்தை கண்ட பொதுமக்கள், விரைந்து செயல்பட்டு ஷாலினியை மட்டும் உயிருடன் மீட்டனர்.

அதற்குள் கார் முழுவதும் குளத்திற்குள் மூழ்கியதால், தீயணைப்புத்துறை தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காரை கயிற்றால் கட்டி இழுத்து கரை பகுதிக்கு இழுத்து வந்தனர். காருக்குள் சிக்கிய ராஜேந்திரனும், மகள் ஷாமிலியும் சடலமாக மீட்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments