கொரோனா காலத்திலும் நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது யோகா - சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

0 3681
7வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்திய பிரதமர் மோடி, நோய்நாடி நோய் முதல்நாடி திருக்குறளை தமது உரையில் சுட்டிக் காட்டினார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஆற்றிய சிறப்புரையில் கொரோனா பேரிடர் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருப்பதாக குறிப்பிட்டார்.

கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் இன்று உலகமே போராடி வருவதாகக் கூறிய பிரதமர் மோடி கோவிட் நோயாளிகள் விரைவில் குணமாக யோகா உதவியிருப்பதாகத் தெரிவித்தார்.

 

நோய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகக கூறிய பிரதமர் நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். 

யோகா நம்மை சோர்விலிருந்து ஆற்றலுக்கு மாற்றுவதாகவும் உள்மன ஆற்றலை அதிகரிப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments