சென்னை பெரும்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீசி இளைஞர் கொலை

0 4821

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் இளைஞர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்டார்.

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த சரத் என்பவர் நேற்று இரவு வீட்டருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 முறை நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது.  இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சரத்தை அதே கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது.

நாட்டு வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்துஓடியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சரத்தை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் போலீசார், சரத் உடலை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்கள் யார்? கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கொலை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments