தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் படிக்கட்டுத்துறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை மற்றும் 14 வகை மளிகைப் பொருள் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மின் கட்டணம் செலுத்த போதுமான அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கால அவகாசத்தின் தேவை இருக்காது எனவும் கூறினார்.
Comments