பாஜக தேசியத் துணைத் தலைவராக இருந்த முகுல்ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

0 6233

பாஜக தேசியத் துணைத் தலைவராக இருந்த முகுல்ராய் மீண்டும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரசில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முகுல்ராய் 2012ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தார். 2017ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த அவர் அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவராக இருந்தார்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்துக்குச் சென்ற முகுல்ராயும் அவர் மகன் சுப்ரான்சு ராயும் மம்தா பானர்ஜி முன்னிலையில் அந்தக் கட்சியில் மீண்டும் இணைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments