இலட்சத்தீவு நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு..! தொலைக்காட்சி விவாதத்தில் அரசுக்கு எதிராகப் பேசியதாக குற்றச்சாட்டு

0 5967

ட்சத்தீவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மலையாளத் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவு மக்கள் மீது கொரோனாவை உயிரி ஆயுதமாக அரசு பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆயிஷாவின் பேச்சு நாட்டுக்கு எதிரான செயல் எனக் கூறி லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் கவரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்துத் தேசத்துரோகம், வெறுப்பைத் தூண்டும் பேச்சு ஆகிய பிரிவுகளில் ஆயிஷா சுல்தானா மீதுவழக்குப் பதியப்பட்டுள்ளது. லட்சத்தீவில் கடந்த ஆண்டு ஒருவருக்குக் கூட கொரோனா இல்லாத நிலையில், டிசம்பரில் நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் பொறுப்பேற்ற பிறகு, விதிகள் தளர்த்தப்பட்டதால் இதுவரை மொத்தம் எட்டாயிரத்து முந்நூறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments