”தடுப்பூசி பதிவுக்கு ஒருநாளில் 1000 முறை தேடுவோரின் கணக்கு முடக்கப்படும்” -கோவின் இணையத்தள குழு எச்சரிக்கை

0 3439

24 மணிநேரத்தில் கோவின் இணையத்தளத்தில் தடுப்பூசி பதிவு செய்ய ஆயிரம் முறைக்கு மேல் தேடுவோர், 50 முறைக்கு மேல் ஓ.டி.பி யைப் பெறுவோரின் பயனாளர் கணக்கு ஒரு நாளுக்கு முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கோவின் தளத்துக்குள் இருக்கும் 15 நிமிடங்களுக்குள் 20 முறைக்கு மேல் தேடுவோர் தானாகவே தளத்தில் இருந்து வெளியேற்றப்படுவர் என்றும் கோவின் இணையத்தள வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

தானியங்கி முறையில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பெயர்களைத் தடுப்பூசிக்குப் பதிவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments