தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3692

கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இன்று வரை 280 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்றும், இந்த நன்கொடைகள் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் தமிழக அரசு விளக்கமாக பட்டியலிட்டுள்ளது.

அந்த வரிசையில் தற்போது கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்குவதற்கு 25 கோடி ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments