மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது..! மும்பையில் பல மணி நேரம் பெய்த கனமழை

0 2940

மும்பையில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையில் மூன்று மாதங்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழைக்கான தென்மேற்குப் பருவ மழைக்காலம் தொடங்கி விட்டது.

தாதர், பெட்டர் ரோடு (Pedder Road) உள்ளிட்ட நகரின் மையப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்ட டவ் தே புயல் காரணமாக கடந்த மே 17ம் தேதி மும்பையில் வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டியது.

இந்நிலையில் பருவமழைக்காலம் திட்டமிட்டபடியே சரியாக தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்ட்ராவின் சோலாபுர், புனே உள்ளிட்ட நகரங்களிலும் தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments